search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • வாக்கு வங்கியை திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.
    • மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:-

    பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

    கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

    சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

    வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

    'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

    சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

    பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

    ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

    தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

    அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்?

    கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • 5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை.
    • பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 49 தொகுதிகளிலும் நாளை மாலை பிரசாரம் ஓய உள்ளது.

    இதையடுத்து, 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 6-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    6-வது கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளில் பீகாரில் 8, அரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில்-6, உத்த ரபிரதேசத்தில்-14, மேற்கு வங்காளத்தில்-8, டெல்லியில்-7 என்ற வகையில் தொகுதிகள் அடங்கி உள்ளன.

    இதில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5-ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று உள்ள நிலையில் 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முதல் தீவிரமாக மாற இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 6-வது கட்டத் தேர்தல் நடக்கும் அரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த மாநிலங்களில் டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவையும் 7 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று 7 தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பாரதீய ஜனதா களம் இறக்கி உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடு கின்றன.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளி லும் போட்டியிடுகிறது என்றாலும் டெல்லியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

    டெல்லியில் பா.ஜ.க., இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தவிர, 99 சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 49 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் 162 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 6 நாட்களே அவகா சம் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி யில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி நாளை வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அந்த தொகுதியில் உள்ள கோண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பேரணி நடத்திவிட்டு அந்த கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதால் நாளை டெல்லியில் மோடி பிரசா ரத்தில் பல்லாயிரக்கணக் கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை 2 தொகுதிகளில் ஆதரவு திரட்ட உள்ளார். சாந்தினி சவுக் மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதி களில் அவர் வாகனப் பேரணி நடத்துகிறார்.

    அதன் பிறகு அவர் சாந்தினி சவுக் தொகுதியில் அசோக் விகார் என்ற பகுதியில் ஜே.பி.அகர்வா லையும், வடமேற்கு டெல்லி தொகுதியில் உதித் ராஜையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகும் 2 நாட்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாளை ஒரு கூட்டத்தில் பேசிய பிறகு மீண்டும் 22-ந் தேதி டெல்லியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று வடமேற்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் வாகனப் பேரணி நடத்த உள்ளார். அந்த தொகுதியில் உள்ள துவாரகா என்ற இடத்திலும் பொதுக் கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்காவும் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இஸ்லா மியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பிரியங்கா செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி சவுக் தொகுதியில் உள்ள 3 இடங்களில் பிரியங்கா பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 6 நாட்களும் முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். கெஜ்ரிவால் மாடல் டவுன், ஜகான்கீர் பூத் பகுதிகளில் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் போட்டியிடும் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கிய வீதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். அவர் தவிர ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் சென்று பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 20-ந் தேதி புதுடெல்லி தொகுதியிலும், 21-ந் தேதி சாந்தினி சவுக் தொகுதியிலும் நட்டா வாகனப் பேரணி நடத்த உள்ளார். தலை வர்களின் முற்றுகையால் டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    • தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்

    பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் காட்டியது போல பீகார் மாநிலத்தில் சீதா கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலினா மம்தா பேனர்ஜியா லாலு பிரசாத் யாதவா? என்று கேள்வி எழுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையை பேங்காக்கில் செலவிடுகிறார். பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். மஹாபாரதத்தை போலவே இங்கும் 2 முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் முகாம், இன்னொன்று கௌரவர்கள் முகாம்.

    இப்பகுதியில் பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    சீதையின் தேசமான இங்கு, பசுவதையை ஏற்க முடியாது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலை கீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் பசுக்களை கடத்தியதாக பல பேரை பசு பாதுகாப்பு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்நிலையில், பசு பாதுகாப்பு கும்பலின் கொலைகளை ஆதரிக்கும் விதமாக, பீகாரில் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை.
    • விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என மோடி விமர்சனம்.

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2004 முதல் 2014 வரை மத்திய விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர்.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என விமர்சனம் செய்து வருகிறார்.

    அதற்கு பதிலடியாக நெருக்கடியான நேரத்தில் பிரதமர் மோடிக்கு உதவிய பழைய சம்பவம் ஒன்றை சரத் பவார் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, விவசாயத்துறை பிரச்சனைகளை என்னிடம் வந்து தெரிவித்ததுடன், குஜராத்துக்கும் அழைத்துச் சென்றார். ஒருமுறை அவர் இஸ்ரேலுக்கு செல்ல விரும்பியதால் (தனித்துவமான விவசாய நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள) அவரையும் அங்கு அழைத்துச் சென்றேன். இப்போது நரேந்திர மோடி என்ன சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.

    இவ்வாற சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மோடி பிரதமரான பின்னர் 2017 ம் ஆண்டு இஸ்ரேல் சென்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இஸ்ரேல் சென்ற முதல் பிரதமர் என்ற பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    • அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.
    • அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அங்கு சமாஜ் வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு உத்தரபிரதேச வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்க இங்கு வந்துள்ளேன். நான்கு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். முதலில் இந்த தேர்தலில், அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

    பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது. அன்று அவர் அமித் ஷாவை தனது வாரிசாக்கி, பிரதமராக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மோடி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    தற்போது அமித் ஷாவுக்கு பதிலாக ஒரே ஒரு தலைவராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. இந்த விதி

    முறையை (75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்) பா.ஜனதா கட்சியில் மோடி ஏற்படுத்தினார். இந்த விதியை அவர் பின் பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    2-வதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 2 அல்லது 3 மாதங் களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

    3-வதாக, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். போகிறார்கள். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்குவார்கள்.

    பா.ஜனதாவினர் எப்போதுமே இட ஒதுக்கீட் டிற்கு எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை (மாற்றி) இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். நான்காவதாக, ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 220 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களது இடங்கள் குறைய போகிறது. பா.ஜனதா ஆட்சியை அமைக்கப் போவதில்லை.

    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, 543 தொகுதிகளில் 143 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று பா.ஜனதாவே நம்புகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.
    • கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    5-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அசம்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் ஜனநாயக திருவிழா பற்றிய செய்திகள் உலக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வருவதை நான் முதல் முறையாக பார்க்கிறேன். இந்தியாவின் அடையாளம் உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆசீர்வாதம் இருப்பதை உலகமே உற்று நோக்குகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடியும் சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தன.

    உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் தங்களால் இயன்றவரை எரிக்க முயன்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் மோடி சி.ஏ.ஏ. கொண்டு வந்தார். அவர் போகும் நாளில் சி.ஏ.ஏ. அகற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர். நாட்டை வகுப்பு வாத தீயில் எரிய செய்தீர்கள்.

    நாட்டில் எங்கிருந்தும் பலத்தை திரட்டி உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.

    மகாத்மா காந்தியின் பெயரை கூறிக் கொண்டு அவர்கள் (காங்கிரஸ்) அதிகார படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். ஆனால் காந்தியின் வார்த்தை அவர்களுக்கு நினைவில் இல்லை.

    இந்த மக்கள் (அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர்) எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்று மகாத்மா காந்தியே உறுதி அளித்தார்.

    கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் வாக்கு வங்கியாக இல்லாததால் அவர்களை பற்றி சிந்திக்க காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    உங்கள் (காங்கிரஸ்) முகமூடியை அவிழ்த்தது மோடிதான். நீங்கள் ஒரு கபடவாதி. வகுப்புவாதி. இந்த நாட்டை 60 ஆண்டுகளாக மதவெறியில் விட்டு விட்டீர்கள்.

    நான் தெளிவாக சொல்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

    370-வது சட்டப்பிரிவை திரும்ப கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியலை யாராலும் செய்ய முடியாது. ஸ்ரீநகரில் நடந்த வாக்குப்பதிவில் மக்கள் காட்டிய உற்சாகம் இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

    நாட்டின் பட்ஜெட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க காங்கிரசும், சமாஜ்வாடியும் விரும்புகின்றன.

    யோகி ஆதித்யநாத் உ.பி.யில் மாபியா, கலவரக்காரர்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார். தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார். பிறகு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளை தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரசாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். அதில் அவர் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

    பாராளுமன்ற தேர்தல் தொடங்கியதில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு என்ன காரணமென்றால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித வரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது.

    எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும்.
    • ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார்.

    நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தற்போது ஜவுளித்துறை மந்திரியாக உள்ளார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தையும் வைத்திருக்கிறார்.

    2003-ல், இரானி பாஜ.க.வில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, அவர் 2004-ல் மகாராஷ்டிர இளைஞர் பிரிவில் துணைத் தலை வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் போது, அவர் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் வெற்றிபெறவில்லை.

    2004 டிசம்பரில், பா.ஜனதாவின் தேர்தல் தோல்விக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கூறிய இரானி, அவர் ராஜினாமா செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டினார். இருப்பினும், பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் சாத்தியமான நடவடிக்கை யின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை வாபஸ் பெற்றார்.

    கட்சிக்கு இரானி செய்த பங்களிப்புகள் அவரை பா.ஜ.க.வின் மத்திய குழுவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது. 2009-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

    2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், இரானி பா.ஜ.க.வின் தேசிய செயலா ளராக நியமிக்கப்பட்டார், மேலும் ஜூன் 24 அன்று, பா.ஜ.க.வின் மகளிர் பிரிவான பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    2011-ல், இரானி பாராளு மன்றத்தில் அறிமுகமானார், குஜராத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மேல்சபை எம்.பி. ஆக பதவியேற்றார்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து உத்தரப்பிர தேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இரானி போட்டியிட்டார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் ராகுலிடம் 107,923 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை நியமித்தார்.

    மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக இரானி பதவி வகித்த காலத்தில், பல்கலைக்கழகங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார்.

    2016-ல், ஆறு கூடுதல் பல்க லைக்கழகங்களில் புதிய யோகா துறைகளை நிறுவுவதாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், இரானி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.

    2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வெங்கையா நாயுடு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரானி அமேதியில் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார், ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை பா.ஜ.க. மேலிடம் களம் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் அவர் அமேதி தொகுதியில் குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அமேதி தொகுதியில் வாக்காளராக மாறியுள்ளார்.

    அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மாவாய் கிராமத்தில் தனக்கென ஒரு வீட்டைப் பெற்று வாக்காளராக விண்ணப்பித்தார். அவர் இப்போது கிராமத்தின் வாக்காளராக மாறியுள்ளார்.

    ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார். அமேதி குடும்பத்தின் மத்தியில் வாழ்வதற்காக அவர் தனது குடியிருப்பை இங்கு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு இருந்தால் ஏற்பட்டிருக்கும் களத்தின் விறுவிறுப்பு, தற்போது போட்டியில்லை என்பதால் ஏமாற்றம் அளிக்கிறது.

    அதே நேரத்தில், இந்த முறை போட்டி ஒரு புதிய முனையைக் கொண்டுள்ளது: "பியூன்" என்று அழைக்கப்படுபவருக்கும் ஒரு மத்திய மந்திரியும் இடையிலான யுத்தம்.

    இங்கு காந்தியின் தேர்தல் பிரசாரங்களை 40 ஆண்டுகளாக நிர்வகித்து, பா.ஜ.க.வால் "பியூன்" என்று அழைக்கப்பட்ட முகம் தெரியாத காங்கிரஸ் தேர்தல் மேலாளர் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். மறுபுறம், ஸ்மிருதி இரானி தன்னைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மந்திரியாக காணப்படுகிறார், அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    சர்மாவின் காந்தி குடும்ப பக்தி அவரது வலிமையான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்றால், பா.ஜ.க தொண்டர்கள் ஸ்மிருதி இரானியின் செல்வாக்கு மற்றும் அது அவர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும், 2014 இல் ராகுலிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2019-ல் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமேதியில் தான் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டுமே ஸ்மிருதி இரானி ஏற்படுத்தி வருகிறார். உண்மையில் ஸ்மிருதி இரானிக்கு எதிரான சில அதிருப்தியை அமேதியில் காண முடிகிறது.

    காங்கிரஸ் தனது பிரச்சாரத்தில், அமேதியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டு பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தடுக்கப்பட்ட திட்டங்களை மேற்கோள் காட்டுகிறது, டிரிபிள் ஐ.ஐ.டி 2016-ல் மூடப்பட்டு பிரயாக்ராஜுக்கு மாற்றப் பட்டது. மெகா புட் பார்க்' மற்றும் ஒரு காகித ஆலை, ஒருபோதும் வெளிச் சத்தைக் காணவில்லை. "பழிவாங்கும் அரசியல்" என்று கூறி, ராஜீவ் காந்தி காலத்தில் வந்த பி.ஹெச்.இ.எல், எச்.ஏ.எல், ஆர்டினன்ஸ் பேக்டரி, சிமென்ட் ஆலை போன்ற திட்டங்களை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

    அமேதியில் புதிய கோகோ கோலா பாட்டில் ஆலை பற்றி ஸ்மிருதி இரானி பேசுகிறார், மேலும் காந்தி குடும்பம் 50 ஆண்டுகள் தொகுதியில் இருந்தபோதிலும், தனக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டு, மேலும் ஆதரவு தேடுகிறார். இப்போது அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு சொந்தமாக வீடு உள்ளது என்பதை அவரும் பா.ஜ.க.வினரும் குறிப்பிடுகின்றனர். மற்றும் விரைவில் பிரதமர் மோடி அமேதியில் திட்டமிடப்பட்ட பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    மறுபுறம், காங்கிரசின் அமேதி மற்றும் ரேபரேலி (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) பிரச்சாரங்களை பிரியங்கா பொறுப்பேற்றுள்ளார். பிரியங்கா ஏற்கனவே சர்மாவுடன் அமேதியில் 15க்கும் மேற்பட்ட "தெருமுனை சந்திப்புகளை செய்திருப்பதால், அவரது நுழைவு காங்கிரஸ் பிரசாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    அமேதியுடன் தனது குடும்பத்தின் பழைய தொடர்பை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ராஜீவ் காந்தியால் அமேதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மாவுக்கு தொகுதியின் ஒவ்வொரு பாதையும் தெரியும் என்கிறார் பிரியங்கா.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்மிருதி இரானியும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவர் வெற்றி உறுதி என்று பா.ஜ.க. நம்புகிறது. அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    • சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
    • கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், போட்டியிட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, அவர் கங்கை நதியில் உள்ள தஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

    இதனால் அவர் மிகவும் நல்ல நேரமாக கருதப்படும் 11.40 முதல் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 'அபிஜித் முகூர்த்தம்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றை இணைத்து, பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்ததாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

    பூசம் (புஷ்ய) நட்சத்திரம், மே 13-ந்தேதி அன்று காலை 11.23 மணிக்கு தொடங்கி மே 14-ந்தேதி பிற்பகல் 1.05 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் செய்யப்படும் செயலானது மங்களத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

    ஏனெனில், இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், ஆசீர்வாதங்களையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிறது.

    மேலும், கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    இந்த நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என தெரிவித்துள்ளனர்.

    • ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
    • ராபர்ட் பிகோ சுடப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    துப்பாக்கியால் சுட்டதில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் பிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்கியா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×